Saturday 13 January 2007

Sangamam (1998)

Actors: Rehman, Vindhya, Manivannan
Director: Suresh Krishna
Music Director: AR. Rehman

Aalaala Kandaa: Hariharan, Viswanathan M S
Margazhi Thingal Allava: Janaki S, Unni Krishnan
Mazhai Thuli: Hariharan, Viswanathan M S
Varaaga Nadhikarai: Shankar Mahadevan
Muthal Murai: Srinivas, Sujatha
Sowkkiyamma Kanne: Nithyasree Mahadevan

Lyrics included in mp3 files : play with wm player

Comments :

3 comments to “Sangamam (1998)”

ஆலாலகண்டா ஆடலுக்குத் (சங்கமம்)
குரல்: எம் எஸ் விஸ்வனாதன், ஹரிஹரன்
வரிகள்: வைரமுத்து

ஆலாலகண்டா ஆஆஆ...
சல்சல் இக்குசல் சல்சல் இக்குசல் (8)

ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க வணக்கமுங்க
என்ன ஆடாம ஆட்டிவெச்ச வணக்கமுங்க வணக்கமுங்க
என்ன ஆடாம ஆட்டிவெச்ச வணக்கமுங்க

ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க வணக்கமுங்க
என்ன ஆடாம ஆட்டிவெச்சே வணக்கமுங்க வணக்கமுங்க

(சல்சல்)

என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமய்யா உம்ம கட்டளைங்க வெல்லும் வரைக்கும்
என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமய்யா உம்ம கட்டளைங்க வெல்லும் வரைக்கும்
நீ உண்டு உண்டு என்ற போதும் நீ இல்லை இல்லை என்ற போதும்
நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்ற போதும்
சபை ஆடிய பாதமய்யா நிக்காது ஒரு போதும்

வணக்கம் வணக்கமுங்க ஆஹா வணக்கம் வணக்கமுங்க
வணக்கமுங்க...வணக்கமுங்க

ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க
என்ன ஆடாம ஆட்டிவெச்ச வணக்கமுங்க
என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமய்யா உம்ம கட்டளைங்க வெல்லும் வரைக்கும்
என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமய்யா உம்ம கட்டளைங்க வெல்லும் வரைக்கும்

Ramesh said...
on 

மழைத்துளி மழைத்துளி (சங்கமம்)
குரல்: ஹரிஹரன், எம் எஸ் விஸ்வனாதன்
வரிகள்: வைரமுத்து

மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்

(மழைத்துளி)

ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க - என்ன
ஆடாம ஆட்டிவெச்ச வணக்கமுங்க
என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமய்யா உம்ம கட்டளைங்க வெல்லும் வரைக்கும்
நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்ற போதும்
சபை ஆடிய பாதமிது நிக்காது ஒரு போதும்

(மழைத்துளி)

தண்ணியில மீன் அழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்ல
எனக்குள்ள நான் அழுதா துடைக்கவே எனக்கொரு நாதியில்ல
என் கண்ணீரு ஒவ்வொரு சொட்டும் வைரம் வைரம் ஆகுமே
சபதம் சபதம் என்றே சலங்கை சலங்கை பாடுமே
மனமே மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு
விழியே விழியே இமையே தீயும்போதும் கலங்காதிரு

நதி நதி அத்தனையும் கடலில் சங்கமம்
நட்சத்திரம் அத்தனையும் பகலில் சங்கமம்
கலைகளின் வெகுமதி உன்னிடத்தில் சங்கமம் சங்கமம்

(மழைத்துளி)

மழைக்காகத்தான் மேகம் அட கலைக்காகத்தான் நீயும் - உயிர்
கலந்தாடுவோம் நாளும் மகனே
நீ சொந்தக்காலிலே நில்லு தலை சுற்றும் பூமியை வெல்லு
இது அப்பன் சொல்லுய சொல்லு மகனே வா
ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்
தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்
புலிகள் அழுவது ஏது அட பறவையும் அழ அறியாது
போர்க்களம் நீ புகும்போது முள் தைப்பது கால் அறியாது
மகனே...
காற்றுக்கு ஓய்வென்பதேது...அட ஏது
கலைக்கொரு தோல்வி கிடையாது...கிடையாது

(ஆலாலகண்டா)

Ramesh said...
on 

மார்கழித் திங்கள் (சங்கமம்)
குரல்: உன்னிகிருஷ்ணன், எஸ் ஜானகி, குழுவினர்
வரிகள்: வைரமுத்து

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏராந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்...

மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா - இது
கண்ணன் வரும் பொழுதல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா

மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா - இது
கண்ணன் வரும் பொழுதல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா (2)
வருவாய் தலைவா வாழ்வே வெறும் கனவா

(மார்கழி)

இதயம் இதயம் எரிகின்றதே இறங்கிய கண்ணீர் அணைக்கின்றதே
உள்ளங்கையில் ஒழுகும் நீர்போல் என்னுயிரும் கரைவதென்ன
இருவரும் ஒரு முறை காண்போமா இல்லை
நீ மட்டும் என்னுடல் காண்பாயா
கலையென்ற ஜோதியில் காதலை எரிப்பது
சரியா பிழையா விடை நீ சொல்லய்யா

(மார்கழி)

சூடித் தந்த சுடர்க்கொடியே சோகத்தை நிறுத்திவிடு
நாளை வரும் மாலையென்று நம்பிக்கை வளர்த்துவிடு
நம்பிக்கை வளர்த்துவிடு
நம் காதல் ஜோதி கலையும் ஜோதி கலைமகள் மகளே வா வா
ஆஆஆ காதல் ஜோதி கலையும் ஜோதி...ஆஆஆ... ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும் (2)
வா...

(மார்கழி)

Ramesh said...
on 

Post a Comment