Wednesday 15 March 2006

Kizhakku Cheemayilae - 1993

Artists: Nepolean, Radhika Sarathkumar, Vijayakumar
Director: Bharathi Rajaa
Music Director: A R Rehman

Athankara Marame: Mano, Sujatha
Kathazhang Kaatu Vazhi: P. Jayachandran, Janaki
Maanuthu Mandhayilae: SP. Balasubramaniam, Sasirekha
Then Kizhakku Cheemayilae: Malaysia Vasudevan, Chitra
Yedhukku Pondatti: Shahul Hameed, TK. Kala, Sunandha

KizhakkuCheemaiyile.rar

Comments :

3 comments to “Kizhakku Cheemayilae - 1993”

ஆத்தங்கர மரமே (கிழக்குச் சீமையிலே)
குரல்: மனோ, சுஜாதா
வரிகள்: வைரமுத்து

அத்தைக்குப் பிறந்தவளே ஆளாகி நின்றவளே
பருவம் சொமந்து வரும் பாவாடைத் தாமரையே
தட்டாம்பூச்சி பிடித்தவள் தாவணிக்கு வந்ததெப்போ
மூன்றாம்பிறையே நீ முழு நெலவானதெப்போ
மௌளனத்தில் நீயிருந்தா யாரைத்தான் கேட்பதெப்போ

ஆத்தங்கர மரமே அரசமர இலையே ஆலமரக் கிளையே அதிலுறங்கும் கிளியே (2)
ஓடக்கர ஒழவுகாட்டுல ஒருத்தி யாரு இவ வெடிச்சி நிக்குர பருத்தி
தாவிவந்து சண்டையிடும் அந்த முகமா தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா
உள்ள சொந்தம் என்ன விட்டுப் போகாது அட ஓடத்தண்ணி உப்புத் தண்ணி ஆகாது

(ஆத்தங்கர)

மாமனே ஒன்னத் தாங்காம ஒட்டியில் சோரும் பொங்காம
பாவி நான் பருத்தி நாராப் போனேனே
காகம்தான் கத்திப் போனாலும் கதவுதான் சத்தம்போட்டாலும்
ஓம்முகம் பாக்க ஓடி வந்தேனே
ஒத்தையில் ஓடக்கரையோரம் கத்தியே ஒம்பேர் சொன்னேனே
ஒத்தையில் ஓடும் ரயிலோரம் கத்தியே ஒம்பேர் சொன்னேனே
அந்த ரயில் தூரம் போனதும் நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே
முத்து மாமா என்ன விட்டுப் போகாதே - என்
ஒத்த உசிரு போனா மீண்டும் வாராதே

(ஆத்தங்கர)

தாவணிப் பொண்ணே சொகந்தானா தங்கமே தழும்பும் சொகந்தானா
பாரையில் சின்னப் பாதம் சொகந்தானா
தொட்டபூ எல்லாம் சொகந்தானா தொடாத பூவும் சொகந்தானா
தோப்புல ஜோடி மரங்கள் சொகந்தானா
ஐத்தயும் மாமனும் சொகந்தானா ஆத்துல மீனும் சொகந்தானா (2)
அன்னமே உன்னையும் என்னையும் தூக்கி வளர்த்த திண்ணையும் சொகந்தானா
மாமம்பொண்ணே மச்சம் பார்த்து நாளாச்சு - ஒம்
மச்சானுக்கு மயிலப் பசுவு தோதாச்சு

(ஆத்தங்கர)

Ramesh said...
on 

மானுத்து மந்தையில (கிழக்குச் சீமையிலே)
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து

மானுத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே
தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி - அவன்
தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி
சீரு சொமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே (2)

(மானுத்து)

நாட்டுக்கோழி அடிச்சு நாக்குசொட்ட சமச்சி
நல்லெண்ண ஊத்திக் குடு ஆத்தா
வெள்ளக் கொடல் வலிச்சா வெள்ளப்பூண்டு உரிச்சி
வெல்லங்கொஞ்சம் போட்டுக் குடு ஆத்தா
பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க
பிள்ளக்கி தாய்ப்பாலத் தூக்கிக் கொடுக்கச்சொல்லு
மச்சான திண்ணையில போத்திப் படுக்கச்சொல்லு

(மானுத்து)

ஆட்டுப்பால் குடிச்சா அறிவழிஞ்சி போகுமுன்னு
எருமப்பால் குடிச்சா ஏப்பம் வந்து சேருமுன்னு
காராம்பசு ஓட்டி வாராண்டி தாய் மாமன்
வெள்ளிச்சங்கு செஞ்சா வௌளக்கி வெக்க வேணுமுன்னு
தங்கத்தில் சங்கு செஞ்சி தாராண்டி தாய் மாமன்
பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க
ஈ எறும்பு அண்டாம எட்டி இருக்கச்சொல்லு
மச்சான ஈரத்துணி கட்டி இருக்கச்சொல்லு

(மானுத்து)

Ramesh said...
on 

கத்தாழங்காட்டு வழி (கிழக்குச் சீமையிலே)
குரல்: ஜெயசந்திரன், எஸ் ஜானகி
வரிகள்: வைரமுத்து

கத்தாழங்காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி...
வண்டி கட்டிப் போறவளே வாக்கப்பட்டுப் போறவளே...

வண்டிமாடு எட்டு வெச்சு முன்னே போகுதம்மா
வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
வண்டிமாடு எட்டு வெச்சு முன்னே போகுதம்மா
வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

கத்தாழங்காட்டு வழி கள்ளப்பட்டி ரோட்டு வழி
வண்டி கட்டிப் போறவளே வாக்கப்பட்டுப் போறவளே
வண்டிமாடு எட்டு வெச்சு முன்னே போகுதம்மா
வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
எட்டுமேல எட்டு வெச்சு முன்னே போகுதம்மா
பொட்டு வெச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

தாயி விருமாயி மனசு மருகுதம்மா
உழுத புழுதியிலும் ஒம்மொகமே தெரியுதம்மா
தங்கம்போல் நான் வளர்த்த தங்கச்சி பிரியக்கண்டு
கத்தாழங்காட்டுக்குள்ள காளைகளும் கதறுதம்மா
வாசப்படி கடக்கயிலே வரலையே பேச்சு
பள்ளப்பட்டி தாண்டிவிட்டா பாதி உயிர் போச்சு

(வண்டிமாடு)

அண்ணே போய் வரவா அழுது போய் வரவா
மண்ணே போய் வரவா மாமரமே போய் வரவா
அணில்வால் மீச கொண்ட அண்ணே ஒன்ன விட்டு
புலிவால் மீச கொண்ட புருஷனோட போய் வரவா
சட்டப்படி ஆம்பளக்கி ஒத்த எடந்தானே
தவளைக்கும் பொம்பளக்கும் ரெண்டு எடந்தானே

(வண்டிமாடு)

Ramesh said...
on 

Post a Comment